Premalatha : வெளியான முக்கிய அறிவிப்பு.. தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு!
தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ள நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோதல் பணி மற்றும் கூட்டணி தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிலையில், உடல்நலப் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள விஜயகாந்த்தும் பங்கேற்றுள்ளார்.
பொதுக்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த விஜயகாந்துக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதே நேரத்தில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், அதற்காக கட்சி விதியில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கட்சியில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு செயல் தலைவர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் போன்ற பதவி கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.
அதன்படி தற்போது தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ள நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் வகையில் முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்