தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Teacher Arrest: மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது!

Teacher Arrest: மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 11, 2023 11:56 AM IST

பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் கைது
ஆசிரியர் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகவும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளையும் தொடர்ந்து பேசி வருவதாக அடிக்கடி புகார் எழுந்த வண்ணம் இருந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் அவதூறாகப் பேசியதாகச் சமீப காலத்தில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்த காரணத்தினால் பள்ளியை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இது குறித்து தகவல் இருந்த புளியங்குடி எஸ்பி அசோக், தாசில்தார் பழனிச்சாமி உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர் பாலசுப்பிரமணியனைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி காவலர்கள் ஆசிரியர் பாலசுப்பிரமணியனின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஆசிரியர் பாலசுப்பிரமணியனைப் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தற்போது ஆசிரியர் பாலசுப்பிரமணியனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்