தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதி பதிவேடு எண்!

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதி பதிவேடு எண்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 15, 2023 10:47 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் கொடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதி பதிவேடு எண்
செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதி பதிவேடு எண்

ட்ரெண்டிங் செய்திகள்

சிறைத்துறையில் பணியாற்றக்கூடிய ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 10 காவல் துறையினர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் வார்டு முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு பணி உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிக்கான பதிவேடு எண் புழல் சிறையில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண் மற்றும் சிறை கைதிகளுக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்த்தை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் புழல் சிறைத்துறை அலுவலர்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வழக்கறிஞர் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கல் வெளியானது.

நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர். மேலும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்கின் வீடு, ராயனுரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடன் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர்.

அமலாகத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் நேற்று அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ள அறையில் அமலாகத்துறை அலுவலர்கள் மூன்றுக்கும் மேற்பட்டோரும் சி.ஆர்.பி.எஃப் போலீசாரும் காத்திருக்கின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சந்தித்தார்.

பின்னர் அமலாகத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைப்படி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்