காதலியுடன் எஸ்கேப் - மீட்டு வந்து விசாரித்தபோது கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்
Escaped With Lover: காதலியுடன் மாயமான இளைஞர் போலீசார் மீட்டு வந்தனர். அப்போது போலீஸ் நிலையத்திலே அவர் கண்ணாடியால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிமாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறு வாழ்வு மையத்தைச்சேர்ந்தவர் பிரசாந்தன். இவருடைய மகன் துஷாந்தன் (20), பெயிண்டரானஇவர் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தபிளஸ் 1 மாணவியை காதலித்து வந்தார். கடந்த 4ம் தேதி துஷாந்தனும், அந்த மாணவியும் மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதில் துஷாந்தன், பிளஸ் 1 மாணவியைஅழைத்துக்கொண்டு பழனிக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, அவர்கள் 2 பேரையும் மீட்டு நேற்று எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போதுதுஷாந்தன், மாணவிக்கு கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார். பின்னர் துஷாந்தன் இயற்கை உபாதை வருவதாக கூறிவிட்டு கழிவறைக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.
அப்போதுபோலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்த துஷாந்தன் திடீரென்று அதை உடைத்து கண்ணாடிதுண்டால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டுவரவே அவர் மயங்கி விழுந்தார்.
உடனேபோலீசார் ஓடி வந்து அவரைமீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடிஅரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மீட்கப்பட்ட மாணவி தூத்துக்குடி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
காதல்விவகாரத்தில் பிளஸ்-1 மாணவியுடன் மீட்கப்பட்ட வாலிபர், எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் கண்ணாடியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
டாபிக்ஸ்