தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sivakasi: சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் 67வயது தாத்தா செய்த வேலையை பாருங்க!

Sivakasi: சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் 67வயது தாத்தா செய்த வேலையை பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 22, 2023 12:36 PM IST

முதியவர் செல்வம் சகோதரிகள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்கு அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

சிவகாசி தாலுகாவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டு மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமிகளிடம் பழகியுள்ளார். சிறுமிகளின் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் அவர்கள் பெற்றோர் வரும் வரை வீட்டில் தனியாக இருந்து வந்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முதியவர் செல்வம் சகோதரிகள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்கு அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தினசரி சிறுமிகளுக்கு பணம் கொடுத்துள்ளார். திடீரென சிறுமிகளிடம் பணம் புழங்குவதை கண்ட பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து முதியவர் செல்வத்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட செல்வத்திடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் வேலைக்குச் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வருவதற்குள் தனியாக தங்கி இருக்கும் சிறுமிகளிடம் 67 வயது முதியவர் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்