தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Kabaddi Player Dies After Fainting During Practice At Arani

கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil
Aug 16, 2022 01:14 PM IST

ஆரணியில் பயிற்சியின் போது மயங்கி விழுந்த கபடி வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கபடி வீரர் உயிரிழப்பு
கபடி வீரர் உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையொட்டி, கபடி போட்டி நடைபெற இருந்த நிலையில், இதற்காக களத்துமேட்டு தெருவை சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட கபடி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வினோத்குமார் கோயில் முன்பு கரணம் அடித்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு வேலுர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, வினோத் குமார் கரணம் அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்