Job opportunity: வனத்துறையில் பணி – விண்ணப்பிக்க அழைப்பு
வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்.) பணியில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்.) பணியில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதற்கான கல்வித்தகுதியாக விலங்கு & கால்நடை அறிவியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிரியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விவசாயம், வனம் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
காலியிடங்கள் 150 உள்ளன. வயது வரம்பு, 1.8.2023ன் அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை விவரங்கள், இரண்டு கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவையாகும். இதற்கான பிரிலிமினரி தேர்வு மையங்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார் ஆகிய இடங்களில் நடைபெறும். மெயின் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டுமே நடைபெறும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். பெண்கள் மற்றும் பட்டியலின பிரிவினருக்கு பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப். 21ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு யூபிஎஸ்சியின் இணையதளத்தில் தொடர்புகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்