Accident: இளம் பெண் தலையில் ஏறிய பேருந்து சக்கரம் - அண்ணன் கண்முன்னே உயிரிழப்பு!
Road Accident Death: சென்னையில் பெண் ஐடி ஊழியரின் தலையில் பேருந்து சக்கரம் ஏறி உயிரிழந்தார்.
சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வருபவர் பிரியங்கா. 22 வயதான இந்த பெண் கிண்டிலுள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பிரியங்கா வேலை முடித்துவிட்டு அவரது அண்ணன் ரிஷி நாதன் உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ராயப்பேட்டை பீட்டர் சாலை அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது அங்கே சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தை முந்தி செல்ல ரிஷி நாதன் முயற்சி செய்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறு கீழே விழுந்துள்ளது. அப்போது கீழே விழுந்த பிரியங்காவின் தலையின் மீது மாநகர பேருந்து சக்கரம் ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே பிரியங்கா பரிதாபமாகத் துடிதுடிக்க உயிரிழந்தார்.
ஆனால் பிரியங்காவின் அண்ணன் ரிஷி நாதன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐடி ஊழியரான இளம் பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.