மனைவியுடன் தகராறு.. அதுக்குன்னு இப்டியா செய்வாங்க… இப்போ உயிரே போச்சுல்ல…
ஆறுமுகநேரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண் டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் தாமஸ்துரை (25). இவர் ஒரு கோழிப்பண்ணையில் தொழிலாளியாக உள்ளார். இவருக்கும், வரண்டியேல் பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (22) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
தாமஸ்துரை தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் தாமஸ்துரை மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை முருகேஸ்வரி கண்டித்தார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த தாமஸ்துரை நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியேறினார்.
மேலும், தற்கொலை செய்துகொள்வதாக கூறி அவர், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அப்போது அங்கிருந்த மின்கம்பியை பிடித்து இழுத்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று, தாமஸ்துரையை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தாமஸ்துரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாப மாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆறு முகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்