Crime: பொள்ளாச்சியில் பயங்கரம்.. நடு இரவில் காதலன் வீட்டிற்கு சென்ற மாணவி..காத்திருந்த அதிர்ச்சி- கர்ப்பிணி வெறிச்செயல்!
பொள்ளாச்சியில் கர்ப்பிணி மனைவி, கணவர் இருவரும் சேர்ந்து கல்லூரி மாணவி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து நடு இரவில் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கௌரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவில் திடீரென்று இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்குடியிருப்பு வாசிகள் பதறிபோய் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு கல்லூரி மாணவி உடல் முழுவதும் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் சடலம் கிடந்த வீடு சுஜய் என்கிற 30 வயது இளைஞரின் வீடு என்பதும், திருமணம் ஆன அவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருப்பது தெரியவந்தது.
கோவை மாவட்டத்தில் இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுஜய், ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் வேலை செய்து வந்திருக்கிறார். அவரின் மனைவி ரேஷ்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவரது அம்மாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் சுஜய் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் சுபலட்சுமி என்பதும், 20 வயதான அந்த இளம் பெண் கோவை மாவட்டத்தில் இடையர்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரிய வந்திருக்கிறது.
நேற்று முன் தினம் இரவு தான் சுப்புலட்சுமியை, சுஜய் அவரின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். சுப்புலட்சுமி உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார். சுஜய்ன் ரேஷ்மாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, சுப்புலட்சுமியுடன் ஆறு ஆண்டுகளாக பழகி வந்ததுள்ளார். இதற்கிடையில், கல்லூரி மாணவிக்கு நடந்த பிரேத பரிசோதனையில் மாணவியின் கழுத்தில் ஐந்து இடங்களில் கத்திக்குத்து விழுந்து உள்ளது தெரியவந்தது. தனி ஒரு நபரால் இந்த கொலையை செய்திருக்க முடியாது என்று மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
இதை அடுத்து சுப்புலட்சுமியை கொலை செய்ய சுஜிக்கு அவரது மனைவி ரேஷ்மா உதவி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.எட்டு மாத கர்ப்பிணியான சுஜியின் மனைவி ரேஷ்மா கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக முதலில் சொல்லப்பட்டது . நேற்று முன் தினம் பொள்ளாச்சிக்கு வந்திருந்ததும், கொலை நடந்த போது அவர் வீட்டில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் சுபலட்சுமி எதற்காக சுஜய் வீட்டிற்கு வந்தார்? எதற்காக கத்தியால் குத்தி சுஜய் அவரை கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில், கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுஜனும், ரேஷ்மாவும் காதலித்து வந்த நிலையில், இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்காலிகமாக பிரிந்து இருந்துள்ளனர். அப்போது சுஜன் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சுபலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இதனிடையே சுஜன் ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டு, பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டிக்கு வந்து தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். திருமணம் நடந்ததை மறைத்த சுஜன் அடிக்கடி சுபலட்சுமி உடன் ரகசியமாக செல்போனில் பேசியும் வந்துள்ளார். இந்நிலையில் சுபலட்சுமி கடந்த 2ஆம் தேதி சுஜனை சந்திக்க பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். சுஜனின் வீட்டுக்குச் சென்ற போது, சுஜனுக்கு திருமணம் நடைபெற்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது சுபலட்சுமிக்கும், ரேஷ்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த சண்டையின் ரேஷ்மா அருகே இருந்த கத்தியை எடுத்து சுபலட்சுமியின் உடலில் ஒன்பது இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சுபலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார்.தலைமறைவான தம்பதியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இருவரும் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்ததும் அங்கு சென்ற போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் தம்பதியை கைது செய்தனர். கர்ப்பிணி மனைவி, கணவர் இருவரும் சேர்ந்து கல்லூரி மாணவி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து நடு இரவில் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்