சந்தேக மரணம் எனில், பிரேத பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்? – நீதிபதி தீர்ப்பு
காவல்நிலையம் உள்ளிட்ட சந்தேகமரணத்தில் , பிரேத பரிசோதனையை நடத்தும் தடயவியல் மருத்துவ நிபுணர், மெமரி சிப் அல்லது வீடியோ கேசட்டைஉடனடியாக சீல் செய்து, தேவையானஅனைத்து விவரங்களுடன் வழக்கு விசாரணைஅதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
அதை தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சந்தேகமரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் மற்றும் வீடியோஆகியவை ஒரே நேரத்தில் இறந்தவரின்குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கவேண்டும். இதுவேஇறந்தவரின் குடும்பத்தினர் உடனடியாகசட்டப்பூர்வ தீர்வுகளை நாடுவதற்கு உதவும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
மதுரைபேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் ரமேஷின்உடலை மறுஉடற்கூராய்வுசெய்ய உத்தரவிடகோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவரது சகோதரர் சந்தோஷ் ஒரு மனு தாக்கல்செய்தார்.
இந்தமனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போதுநீதிபதி, சந்தேக மரணம் என புகார் எழுந்தபின்னர், பிரேத பரிசோதனைஏன் மதுரை அல்லது தேனி அரசு மருத்துவமனையில் நடத்தாமல்அவசர அவசரமாக உசிலம்பட்டி அரசுமருத்துவமனையிலே நடத்தப்பட்டது?
காவல்துறையினரால்துன்புறுத்தப்பட்டு உயிர் இழந்துள்ளார் என்று புகார் கூறப்பட்டுள்ள நிலையில், ஏன் உரிய விதிமுறைகளைபின்பற்றி பிரேத பரிசோதனை நடத்தவில்லை?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சந்தேக மரணங்கள் குறித்து புகார் எழுந்தால், உடற்கூராய்வு மேற்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து , இதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
காவல்நிலையம் , சிறை சாலை உள்ளிட்டசந்தேக மரணம் என புகார் எழுந்தால், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவர் உடற்கூராய்வின்போது உடன் இருக்க அனுமதிக்கவேண்டும். உடற்கூராய்வுக்கு முன் புகைப்படம் எடுக்கலாம்.
பிரேதபரிசோதனையின் முடிந்த உடனேயே, இறந்தவரின் பெயர் போன்ற வழக்கு தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், இறந்தவரின் பொதுவான விவரங்கள், பிரேத பரிசோதனை விவரங்கள் போன்றவை வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதன்பிறகு, பிரேதப் பரிசோதனையை நடத்தும் தடயவியல் மருத்துவ நிபுணர், மெமரி சிப்/வீடியோ கேசட்டைஉடனடியாக சீல் செய்து, தேவையானஅனைத்து விவரங்களுடன் உடனடியாக வழக்கு விசாரணைஅதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதை தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
பிரேதபரிசோதனை அறிக்கையின் நகல் மற்றும் வீடியோஆகியவை ஒரே நேரத்தில் இறந்தவரின்குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசிடம் வழங்கப்பட வேண்டும். இதுவே இறந்தவரின் குடும்பத்தினர் உடனடியாக சட்டப்பூர்வ தீர்வுகளை நாடுவதற்கு உதவும்.
பிரேதப்பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், இறந்த குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசு அல்லது பிரதிநிதிகள் உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதாக எழுத்துப்பூர்வமாகஅளித்தால், உடல், குறைந்தது 48 மணிநேரம் பிணவறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்குள்தகனம் செய்தோ அல்லது வேறு வழியிலோ உடலைஅப்புறப்படுத்தினால், இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் நடத்துவதன் நோக்கம் பயனற்றதாகிவிடும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவிதுள்ளார்.
டாபிக்ஸ்