Ma.Subramanian: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாள்தோறும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சியை எடுத்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை நடை பயிற்சியும் ஓட்டப்பயிற்சியையும் முடித்தார். இதையடுத்து அவர் வீட்டில் பார்வையாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மா.சுப்பிரமணியத்திற்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது. இந்நிலையில் இன்று காலை அவருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அதனால் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் உள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்