EVKS உடல்நிலை எப்படி இருக்கிறது? - மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை
EVKS Health: மூச்சுத்திணறல் மற்றும் திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த மார்ச் 15ஆம் தேதி நள்ளிரவு ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி நள்ளிரவு சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் திடீர் நெஞ்சுவலி அவருக்கு ஏற்பட்டிருந்ததாகவும், லேசான நுரையீரல் தொற்று பாதிப்பும் அவருக்கு இருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இருதய சிகிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், லேசான நுரையில் தொற்றும் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக உள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
கடந்த மார்ச் 22ஆம்தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்ப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இன்றைய தினம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15.03.2023 அன்று ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ மையத்தில் கொரோனரி தமனி நோய், இதய செயலிழப்பு மற்றும் கோவிட் தொற்று ஆகிய பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார்.
இதய செயலிழப்பு மற்றும் கோவிட் நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வருகிறார் என மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.