டான்சர் ரமேஷ் கொலையா? அந்த 4 பேர் யார்? வெளியான பகீர் தகவல்!
Dancer Ramesh Death: ரமேஷ் கீழே விழுந்து இறந்த பிறகு அந்த 4 பேரையும் காணவில்லை. ரமேஷ் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என ரமேஷ் உறவினர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த டான்சர் ரமேஷ்க்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் இவரது முதல் மனைவியும், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் இவரது இரண்டாவது மனைவியும் வசித்து வருகின்றனர். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி டான்சர் ரமேஷ் வசித்து வந்தார். இவர் டிக்டாக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் நடனம் மூலம் பிரபலமானார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ரமேஷ் சமூக வலத்தளம் மட்டுமின்றி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 27) டான்சர் ரமேஷ் தனது பிறந்த நாளை கொண்டாட கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டாவது மனைவி இன்பவள்ளி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுக்கு விருந்து வைக்க, தனது 2ஆவது மனைவி இன்பவள்ளியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.மனைவி பணம் தர மறுக்கவே, ரமேஷ் விரக்தியடைந்து யாரும் எதிர்பார்க்காத வேளையில், வீட்டின் 10வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ரமேஷின் மரணம் குறித்து இரண்டாவது மனைவி தரப்பில், ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், முதல் மனைவி சித்ரா, தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டான்சர் ரமேஷின் மரணம் பலரையும் அதிர்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில் அவரது மரணம் தொடர்பாக அவரது தம்பி பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார், “அவர் தற்கொலை செய்துக் கொள்ளக்கூடிய நபர் அல்ல, இன்றைக்கு அண்ணனின் பிறந்தநாள். அவர் எவ்வுளவு குடித்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அவர் முடிவெடுப்பவர் அல்ல.
எந்த பிரச்னை நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் கடந்து சென்றுவிடுவார். நிறைய குடிக்க வேண்டும் என்பதால்தான் அவர் மீண்டும் முதல் மனைவியிடம் சென்றார். எங்கள் அண்ணி உடன் இருக்கும் போது அவரை குடிக்க விடமாட்டார்கள், அப்படியே குடிக்க வேண்டும் என்றாலும் குறைவான மதுவையே கொடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரமேஷின் தாய் கூறும்போது, "நாங்கள் சென்று பார்க்கும் போது ரமேஷ் உடல் மிகவும் மோசமான நிலையில் கைகால்களை உடைந்து முதுகு பிளந்தது போன்று இருந்தது. உடனே போலீசார் வந்து மறைத்து விட்டனர் முகத்தை கூட பார்க்கவில்லை" என்றார்.
இந்நிலையில், முதல் மனைவியின் அக்கா அமுல் ராணி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நேற்று முன்தினம் மாலை கே.பி. பார்க் குடியிருப்புக்கு 4 பேர் வந்திருக்கிறார்கள். அப்போது டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று கேட்டு அவரிடம் டான்ஸ் கற்றுக்கொள்ள வந்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் ரமேஷ் கீழே விழுந்து இறந்த பிறகு அந்த 4 பேரையும் காணவில்லை.ரமேஷ் இறப்பில் சந்தேகம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதனால் ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா அந்த நான்கு பேர் யார் என்ற கேள்விகள் எழுகின்றனர். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்