Coimbatore: தங்கம் விக்கிற விலையில இங்க என்ன நடந்திருக்கு பாருங்க!
11 பேரும் தலா அரைக்கிலோ தங்கத்தை உடலின் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
கோவைக்கு சார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.62 கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று காலை 4.30 மணி அளவில் ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காலையில் வந்த பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது விமானத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான 11 பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் 11 பேரும் தலா அரைக்கிலோ தங்கத்தை உடலின் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதுமட்டும் இல்லாமல் மலக்குடல், காலணி மற்றும் ஜீன்ஸ் பேண்ட்களில் மறைத்து வைத்து நூதன முறையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. 11 பேரிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 3.8 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தங்க கடத்தல் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜுனன் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற நபர்களிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்