போதையில் பைக் ஓட்டிய போலீஸ் - என்ன தண்டனை பாருங்க…
நெல்லையில் போதையில் பைக் ஓட்டி வந்த ஆயுதப்படை போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லைசந்திப்பு எஸ்.என். ஹைரோட்டில்போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அந்த நபர், நானும்ஒரு போலீஸ்காரர் தான், தான் தலைவர் சிலைக்குமாலை அணிவிக்க செல்ல வேண்டும் என்று கூறி போக்குவரத்து போலீசாருடன்வாக்குவாதத் தில் ஈடுபட்டார். இதுகுறித்துநெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சந்திப்புபோலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை தடத்தினர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதில், அவர் அவர் பாளையங்கோட்டைஅருகே உள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த மாரிமுத்து (40) என்பதும், அவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில்டிரைவராக பணியாற்றுவதும் தெரிய வந்தது.
மேலும்மருத்துவ விடுப்பில் இருந்த போலீஸ்காரர் மாரிமுத்து மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்துஅவருக்கு அதிரடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆயுதப்படை போலீசே போதையில் பைக் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்