Kallakurichi Liquor Deaths: ’கள்ளச்சாராய மரணம்! சினிமாகாரர்களுக்கு மன்னிப்பே கிடையாது’ நடிகர்களை விளாசும் ஜெயக்குமார்!
Kallakurichi Liquor Deaths: கள்ளக்குறிச்சி மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! என தெரிவித்து உள்ளார் என ஜெயக்குமார் ட்வீட்

Kallakurichi Liquor Deaths: ’கள்ளச்சாராய மரணம்! சினிமாகாரர்களுக்கு மன்னிப்பே கிடையாது’ நடிகர்களை விளாசும் ஜெயக்குமார்!
மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் வரை உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக தனது ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!
இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!