Actor Vijay: ’அம்பேத்கரை படியுங்கள்!’ நடிகர் விஜயின் பேச்சுக்கு விசிக வரவேற்பு!
”விஜய் அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது” விசிக ட்வீட்
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
பொறுப்புணர்ச்சி வந்தது போல் உணர்கிறேன்
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு ஏதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.
அசுரன் வசனத்தை நினைவு கூர்ந்து பேச்சு
நான் பள்ளியில் ஒரு சாதாரண மாணவன் தான். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை பார்க்கும் போது என் பள்ளி காலங்களை நினைவு கூர்கிறேன். சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது. காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுக, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுக, ஆனால் படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது.. என்று வசனம் வரும்.
ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவு செய்கிறார்கள்
கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது. நாளைய வாக்காளர்களான நீங்கள் தான் ஓட்டுபோட்டு புதிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். நம் கைகளைக் கொண்டு நம் கண்களை குத்தும் செயல் நடக்கிறது. காசு வாங்கி கொண்டு வாக்கு செலுத்துகிறோம். ஒரு தொகுதியில் 15 கோடி ரூபாய் செலவு செய்தால் அதற்கு முன்பு அவர் எவ்ளோ சம்பாதித்து இருப்பார்கள்?. பணம் கொடுப்பவர்கள் தோல்வியடைந்தால், அது நீங்கள் கொடுக்கும் பரிசு.
அம்பேத்கர், பெரியார், காமராஜர்
பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் கூற வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
விஜய் பேச்சுக்கு விசிக வரவேற்பு
இந்த நிலையில் நடிகர் விஜயின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்பட்ட ட்வீட்டில் ”நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அதுவும் திரு விஜய் அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள் என குறிப்பிட்டு நடிகர் விஜய், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆக்கியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது