Burger: பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு உடல் நிலை பாதிப்பு!
நாமக்கல்லில் செயல்பட்டு வரும் மிஸ்டர் பர்கர் உணவகத்தில் நேற்று முன்தினம் பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடும் உடல் நல பாதிப்பால் இளைஞர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் பகுதியில் ஏற்கனவே சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் தற்போது பர்கர் சாப்பிட்ட இளைஞர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
நாமக்கல்லில் செயல்பட்டு வரும் மிஸ்டர் பர்கர் உணவகத்தில் நேற்று முன்தினம் பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடும் உடல் நல பாதிப்பால் இளைஞர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தவக்குமார், சுஜாதா தம்பதிக்கு கலையரசி, பூபதி ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 16-ம் தேதி இரவு சுஜாதா தன் மகள், மகன் மற்றும் அண்ணன் சினோஜ், அண்ணி கவிதா ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
ஹோட்டலில் வாங்கிவந்த உணவுகளை வீட்டில் சாப்பிட்டபின் சிறிது நேரத்தில் கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சலசலப்பு அடங்குவதற்குள் பர்கர் சாப்பிட்ட இளைஞர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்