TN Assembly: ’ஓ இதுதான் அசெம்பிளியா..!’ பேரவைக்கு வந்த ஆஸ்திரேலிய எம்.பிக்கள்! மேசைகளை தட்டி எம்.எல்.ஏக்கள் ஆரவாரம்!
“அவை உறுப்பினர்கள் மேசைகளை தட்டி ஆஸ்திரேலிய எம்.பிக்களுக்கு வரவேற்பு அளித்தனர்”
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி, முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மறைந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
பின்னர் வழக்கம் போல் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்ற போது சட்டப்பேரவை நிகழ்வுகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மில்டன் டிக் தலைமையில் ஆஸ்திரேலிய எம்.பிக்கள் பார்வையிட்டனர்.
இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையிலான நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பேரவையில் உள்ள முக்கிய பிரமூகர்களுக்கான பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நான் வரவேற்கிறேன் என்றார்.
இதனை அடுத்து அவை உறுப்பினர்கள் மேசைகளை தட்டி ஆஸ்திரேலிய எம்.பிக்களுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் மற்றும் ஆஸ்திரேலிய எம்.பிகள் பேரவை மாடத்தில் இருந்து எழுந்து நின்று இருகைக்களை கூப்பி நன்றி தெரிவித்தனர்.
டாபிக்ஸ்