குறுக்கே வந்த டூவீலர்.. அரசு பஸ் கவிழ்ந்து விபத்து .. 30 பயணிகள் நிலை என்ன!
Dindigul Government Bus Accident : திண்டுக்கல் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் உயிர் தப்பினர்.
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை வத்தலகுண்டு சேர்ந்த ஸ்ரீதர் பாண்டி (35) ஓட்டி வந்தார். திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலை கோவிலூர் அருகே சென்ற போது குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
எனவே ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது மோதுவதை தவிர்க்க திடீர் பிரேக் பிடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராத விதமாக சாலையில் உருண்டு சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் டிரைவர் ஸ்ரீதர்பாண்டி(36), நடத்துனர் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி சிங்கராஜ் (43), மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த கொசவபட்டி ஜெசிகா (31), உசிலம்பட்டி சேர்ந்த மகேஸ்வரி (35), மதுமிதா (17), பாரதிபுரம் பவித்ரா (23), சசிகலா (38) ஆகியோர் காயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்