தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Biggboss7tamil: ‘கமல் எபிசோடுக்குப் பின் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்’ இரவு முழுக்க மஜாவும் புலம்பலும்!

BiggBoss7Tamil: ‘கமல் எபிசோடுக்குப் பின் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்’ இரவு முழுக்க மஜாவும் புலம்பலும்!

Nov 13, 2023 11:30 AM IST Stalin Navaneethakrishnan
Nov 13, 2023 11:30 AM , IST

  • Biggboss7tamil: பிக்பாஸ் 7 தமிழில், ஞாயிறு கமல் எபிசோட் முடிந்த பின், வீட்டில் நடந்த சம்பவங்களின் சிறு தொகுப்பும், முக்கிய உரையாடலும்!

பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியிலிருந்து, ஐஸூ வெளியேற்றப்பட்ட பின், பிக்பாஸ் வீடு இரவு முழுக்க இரண்டாக பிரிந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. மாயா,பூர்ணிமா, சரவண விக்ரம், அக்சயா, ஜோவிகா உள்ளிட்ட அனைவரும் ஒரே இடத்தில் உறங்கினர். நாம எந்த குரூப்பில் இருக்கிறோம் என்று தெரியாத கானா பாலா, அவர்களுடன் அமர்ந்து பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேசிய சரவண விக்ரம், ‘அந்த டீம் கூட பேசவே பிடிக்கல..’ என்று கூறினார். ‘நாம செய்த நல்லதெல்லாம் தப்பா வெளியே போயிருக்கு’ என்று வழக்கம் போல உருட்டிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. ‘நான் தினேஷை கேப்டன்னு சொல்லமாட்டேன்.. அவர் ஆட்சினு சொல்ல மாட்டேன்’ என மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றினார் ஜோவிகா. எல்லாம் நடக்கும் போது, சுற்றி பெண்கள் உறங்க நடுவில் படுத்துக் கொண்டு, அவர்களின் தலை முடியை கோவிக் கொண்டிருந்தார் சரவண விக்ரம். 

(1 / 4)

பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியிலிருந்து, ஐஸூ வெளியேற்றப்பட்ட பின், பிக்பாஸ் வீடு இரவு முழுக்க இரண்டாக பிரிந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. மாயா,பூர்ணிமா, சரவண விக்ரம், அக்சயா, ஜோவிகா உள்ளிட்ட அனைவரும் ஒரே இடத்தில் உறங்கினர். நாம எந்த குரூப்பில் இருக்கிறோம் என்று தெரியாத கானா பாலா, அவர்களுடன் அமர்ந்து பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேசிய சரவண விக்ரம், ‘அந்த டீம் கூட பேசவே பிடிக்கல..’ என்று கூறினார். ‘நாம செய்த நல்லதெல்லாம் தப்பா வெளியே போயிருக்கு’ என்று வழக்கம் போல உருட்டிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. ‘நான் தினேஷை கேப்டன்னு சொல்லமாட்டேன்.. அவர் ஆட்சினு சொல்ல மாட்டேன்’ என மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றினார் ஜோவிகா. எல்லாம் நடக்கும் போது, சுற்றி பெண்கள் உறங்க நடுவில் படுத்துக் கொண்டு, அவர்களின் தலை முடியை கோவிக் கொண்டிருந்தார் சரவண விக்ரம். 

‘மாயா அன் கோ’ கமல் எபிசோட் முடிந்து தூக்கம் இல்லாமல், அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க, சம்மந்தமே இல்லாமல் அங்கு அமர்ந்து கொண்டு, அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார் கானா பாலா. அவரைப் பொருட்படுத்தாமல், வழக்கம் போல, அவர்கள் தங்கள் தரப்பு ‘நியாயத்தை’ பேசிக் கொண்டிருந்தனர். 

(2 / 4)

‘மாயா அன் கோ’ கமல் எபிசோட் முடிந்து தூக்கம் இல்லாமல், அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க, சம்மந்தமே இல்லாமல் அங்கு அமர்ந்து கொண்டு, அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார் கானா பாலா. அவரைப் பொருட்படுத்தாமல், வழக்கம் போல, அவர்கள் தங்கள் தரப்பு ‘நியாயத்தை’ பேசிக் கொண்டிருந்தனர். 

பிக்பாஸ் எலிமினேஷனில் ஐஸூ வெளியேற்றப்பட்ட நிலையில், கொதித்துப் போல நிக்சன், ‘இதுக்கெல்லாம் அவனுங்க தான் காரணம், சும்மா இருந்த எங்களை தப்பா வெளியே கொண்டு போய், அவளை துரத்திட்டாங்க’ என அப்பாவியாக ஆர்ப்பரித்து, படுக்கையில் உறங்கிக் கொண்டார். பிக்பாஸ் மைக் போடச் சொல்லும், அவர் அதை கேட்க மறுத்து, படுத்துக் கொண்டார். பிராவோ பிறந்தநாள் கேக் வெட்டும் போது கூட , அவர் பங்கேற்கவில்லை. 

(3 / 4)

பிக்பாஸ் எலிமினேஷனில் ஐஸூ வெளியேற்றப்பட்ட நிலையில், கொதித்துப் போல நிக்சன், ‘இதுக்கெல்லாம் அவனுங்க தான் காரணம், சும்மா இருந்த எங்களை தப்பா வெளியே கொண்டு போய், அவளை துரத்திட்டாங்க’ என அப்பாவியாக ஆர்ப்பரித்து, படுக்கையில் உறங்கிக் கொண்டார். பிக்பாஸ் மைக் போடச் சொல்லும், அவர் அதை கேட்க மறுத்து, படுத்துக் கொண்டார். பிராவோ பிறந்தநாள் கேக் வெட்டும் போது கூட , அவர் பங்கேற்கவில்லை. 

ஐஸூ எலிமினேஷனில் போய்விட்டார் என்பதை விட, நமக்கு எதிரா இந்த எபிசோட் போய்விட்டதே என்கிற கவலை தான், பூர்ணிமாவுக்கும், மாயாவுக்கும். ‘எனக்கு வெளியே போறது பிரச்னை இல்ல.. ஆனால், இந்த பேரோடு போகக் கூடாது; இதுக்காக தான் எங்கம்மா இந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம்னு சொன்னாங்க’ என்று மாயாவிடம் கூறினார் பூர்ணிமா. அப்போது குறுக்கிட்ட சரவண விக்ரம், ‘நீங்க சரியா தான் இருக்கீங்க..’ என்று கூறி, ஆறுதல் தந்தார். 

(4 / 4)

ஐஸூ எலிமினேஷனில் போய்விட்டார் என்பதை விட, நமக்கு எதிரா இந்த எபிசோட் போய்விட்டதே என்கிற கவலை தான், பூர்ணிமாவுக்கும், மாயாவுக்கும். ‘எனக்கு வெளியே போறது பிரச்னை இல்ல.. ஆனால், இந்த பேரோடு போகக் கூடாது; இதுக்காக தான் எங்கம்மா இந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம்னு சொன்னாங்க’ என்று மாயாவிடம் கூறினார் பூர்ணிமா. அப்போது குறுக்கிட்ட சரவண விக்ரம், ‘நீங்க சரியா தான் இருக்கீங்க..’ என்று கூறி, ஆறுதல் தந்தார். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்