Karnataka Election: கர்நாடக பரப்புரை களத்தில் குதிக்கும் சோனியா! ஷெட்டரை ஆதரித்து மே 6-இல் பரப்புரை
மே 6ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் ஹுப்பள்ளிக்கு வரும் சோனியா காந்தி, தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிறகு, அவர் அங்கிருந்து மதியம் 3.30 மணிக்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உள்ளூர் தலைவர்களை தாண்டி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, பிரியங்கா காந்தி, ஜே.பி.நட்டா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்களின் பரப்புரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தியும் இணைந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
வரும் சனிக்கிழமை ஹுப்பள்ளியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து சோனியா காந்தி பரப்புரை மேற்கொள்கிறார். இத்தொகுதியில் ஷெட்டருக்கு எதிராக மகேஷ் தெங்கிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
வரும் மே 6ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் ஹுப்பள்ளிக்கு வரும் சோனியா காந்தி, தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிறகு, அவர் அங்கிருந்து மதியம் 3.30 மணிக்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது ஒரே பொதுக்கூட்டம்" என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் 36.6 கிமீ சாலைக் கண்காட்சியை நடத்துகிறார். நகரின் 17 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக இந்த சாலைக் காட்சி செல்லும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 10.1 கிமீ தூரமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 26.5 கிமீ தூரமும் பிரதமர் பயணிப்பார் என பாஜக தலைவர்கள் தெரிவித்த்துள்ளனர்.மே 8ஆம் தேதியுடன் பரப்புரை முடியும் நிலையில் தேசியத் தலைவர்களின் பரப்புரை கர்நாடகாவில் கலைக்கட்டி உள்ளது.