தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : சோகம்.. கர்ப்பிணியை காலால் மிதித்ததில் 5 மாத சிசு பலி.. கதறி துடித்த பெற்றோர்.. என்ன நடந்தது?

Crime : சோகம்.. கர்ப்பிணியை காலால் மிதித்ததில் 5 மாத சிசு பலி.. கதறி துடித்த பெற்றோர்.. என்ன நடந்தது?

Divya Sekar HT Tamil
Sep 21, 2023 10:30 AM IST

கர்நாடகாவில் மோதலை விலக்கி விட முயன்ற போது கர்ப்பிணியை காலால் மிதித்ததில் வயிற்றில் இருந்த 5 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 5 மாத சிசு பலி
5 மாத சிசு பலி

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் நிலம் தொடர்பாக 2 பேரும் சாலை யில் நின்றபடி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். கணவர் சண்டை போடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹர்ஷிதா சண் டையை விலக்கிவிட சென்றார். அப்போது தனது கணவரை பிடித்து இழுத்தார்.

அந்த சமயத்தில் கர்ப்பிணி ஹர்ஷிதாவின் வயிற்றில் தவறுதலாக அங்கிருந்தவர்கள் உதைத்ததாக தெரிகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் ஹர்ஷிதா அலறிதுடித்தார். மேலும் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்தனர்.

அப்போது வயிற்றில் மிதித்ததில் 5 மாத சிசு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி துடித்தனர். இதுபற்றி தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்