Rajasthan: Rajasthan: வீட்டின் மேல் விழுந்த விமானம் - 3 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG 21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் மாநிலம் சூரத் கர் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமாக பயிற்சிக்கு இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 (IAF MiG 21) ரக போர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனால் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. வான்வெளியில் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக பறந்த இந்த விமானத்திலிருந்து அதில் பயணம் செய்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்துள்ளார். உடனே கட்டுப்பாடு இழந்த அந்த விமானம் ஹனுமந்து பார்க் அருகே பஹ்லோக் நகர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மேல் பயங்கர சத்தத்துடன் விழுந்து வெடித்துள்ளது.
அப்போது அந்த வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. விமானத்திலிருந்து தப்பித்த விமானி லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
மிகப்பெரிய சத்தம் கேட்டதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கு ஓடி வந்துள்ளனர். உடனே இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து வந்துள்ளனர்.
விபத்தில் வெடித்த விமானத்திலிருந்து சிதறிய பாகங்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் என்னவென்று தற்போது வரை முழுமையாக தெரியவில்லை. இந்த விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ள விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்