தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் மீட்பு

திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் மீட்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 03, 2023 11:55 AM IST

சந்திரசேகரன் அளித்த புகாரை அடுத்து திருப்பதி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தப்பட்ட சிறுவன்
கடத்தப்பட்ட சிறுவன்

ட்ரெண்டிங் செய்திகள்

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் திருப்பதிக்கு சென்று இருந்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு நேற்று இரவு மீண்டும் சென்னை திரும்ப திருப்பதி பேருந்து நிலையம் வந்தார்.

அப்போது பேருந்துக்காக பிளாட்பார் எண் மூன்றில் அவர்கள் காத்திருந்தனர். அப்போது சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே உறங்கி விட்டனர். இரண்டரை மணி அளவில் மகன் அருள் முருகன் காணாமல் போனதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெற்றோர் சிறுவனை அப்பகுதியில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை.

இதைத்தொடர்ந்து சந்திரசேகரன் அளித்த புகாரை அடுத்து திருப்பதி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது குழந்தையை ஆந்திர எல்லைப்பகுதிக்குள் மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்