தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gujarat: ஓரினச்சேர்க்கையால் வந்த வினை.. பார்சல் அனுப்பி காதலியின் கணவர், மகளை கொன்ற பெண்! - குஜராத்தில் பயங்கரம்!

Gujarat: ஓரினச்சேர்க்கையால் வந்த வினை.. பார்சல் அனுப்பி காதலியின் கணவர், மகளை கொன்ற பெண்! - குஜராத்தில் பயங்கரம்!

Kalyani Pandiyan S HT Tamil
May 03, 2024 09:31 AM IST

படுகாயம் அடைந்த அவரது குழந்தைகள் வடலியில் அருகே உள்ள மருத்துமனைக்கு அவசரகதியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பெற்ற பிறகு, அவர்கள் அங்கிருந்து ஹிம்மத் நகர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

குஜராத்தில் பார்சல் வெடித்து தந்தை மகள் பலி!
குஜராத்தில் பார்சல் வெடித்து தந்தை மகள் பலி!

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டம், வேதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா வன்சாரா (33). இவரது வீட்டிற்கு நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பார்சல் ஒன்றை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.

அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் எலக்ரானிக் பொருள் ஒன்று இருந்து இருக்கிறது. இதனையடுத்து ஜிதேந்திரா குடும்பம் அதில் மின்சாரம் கொடுக்க, அது வெடித்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஜிதேந்திரா வன்சாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

படுகாயம் அடைந்த அவரது குழந்தைகள் வடலியில் அருகே உள்ள மருத்துமனைக்கு அவசரகதியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பெற்ற பிறகு, அவர்கள் அங்கிருந்து  ஹிம்மத் நகர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் வன்சாராவின் 11 வயதான மகள் சிகிச்சைப்பலன்றி உயிரிழந்தார். அவரது சகோதரியும், உறவுக்காரப்பெண்ணும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதில் ஒருவர் வெண்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார். 

இது குறித்து காவல் அதிகாரி பேசும் போது, “ பார்சல் ஒன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மின்சாரம் கொடுத்த போது, அது வெடித்து இருக்கிறது.” என்று கூறினார்.

சம்பவத்தை நேரில் பார்த்த உறவுக்காரர் ஒருவர், அந்த பார்சலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு வந்ததாக கூறினார். காவல்துறை அந்த குடும்பம் என்ன விதமான பொருளை ஆர்டர் செய்தது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.

அந்த விசாரணையில், ஜெயந்தி வன்சாரா என்பவர் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் இணைக்கப்பட்ட பார்சலை ஜிதேந்திரா வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார் என்பதும் அவர் ஜெயந்தி வன்சாரா மனைவியின் மீது காதல் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்