Gujarat: நானும் வேலைக்கு வரலாமா? சிங்கம் விசிட்; ஊழியர்கள் பதற்றம்
அந்த சிங்கம் எந்த பகுதிக்கு சென்றது என்பது இதுவரை தெரியவில்லை
குஜராத்தில் தனியார் அலுவலகம் ஒன்றில் சிங்கம் ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
குஜராத் மாநிலம் ராஜூலாவில் தனியார் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 50க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று அலுவலகத்தில் வழக்கம் போல் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் சிங்கம் ஒன்று அலுவலகத்திற்குள் நுழைந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். ஹாயாக அலுவலகத்திற்குள் நுழைந்த சிங்கம் பொறுமையாக ஒவ்வொரு அறையாக சென்றது. அங்கிருக்கும் பொருட்களை எல்லாவற்றையும் பார்த்த சிங்கம் பின் தானாகவே அமைதியாக வெளியேறி விட்டது.
சிங்கம் வெளியேறிய பின்தான் அங்கிருந்த ஊழியர்கள் அமைதியடைந்தனர். இதையடுத்து சிங்கம் அலுவலகத்திற்குள் சென்ற சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானது. சமூக வலைதளத்தில் அந்த காட்சிகள் வைரலாக தொடங்கியது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ஒரு வேளை சிங்கம் வேலை கேட்டு மேனேஜரை தேடி வந்திருக்குமோ என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில் அந்த சிங்கத்தை வனத்துறை அதிகாரிகள் தேடி வந்துள்ளனர். ஆனால் அந்த சிங்கம் எந்த பகுதிக்கு சென்றது என்பது இதுவரை தெரியவில்லை. இதுவரைக்கும் வனத்துறையால் அதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
சமீபத்தில் இதே பகுதியில் ஒரு கூட்டமாக ஆண் மற்றும் பெண் என்று 8 சிங்கங்கள் சுற்றி திரிந்தன. அந்த பரபரபப்பு அடங்குவதற்குள் தனியார் நிறுவன வளாகத்திற்குள் ஆண் சிங்கம் தனியாக உலாவியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்