தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Murder: படத்த பாத்துட்டு யோசிப்பாங்களோ? - பீப்பாயில் இளம் பெண் உடல்!

Murder: படத்த பாத்துட்டு யோசிப்பாங்களோ? - பீப்பாயில் இளம் பெண் உடல்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2023 11:21 AM IST

பெங்களூர் ரயில் நிலையத்தில் பீப்பாயில் இளம் பெண் உடலை அடைத்து வைத்துவிட்டு அடையாளம் தெரியாதவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இளம் பெண் உடல்
இளம் பெண் உடல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதனை வந்து பார்த்த ரயில்வே காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பீப்பாயின் உள்ளே கவரில் சுற்றப்பட்டு ஒரு பெண்ணின் உடல் இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் வயது 30 இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணை கொலை செய்துவிட்டு யாரும் அடையாளம் தெரியாத நபர்கள் பீப்பாயில் அடைத்து ரயில் நிலையத்தில் போட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் ரயில் நிலையத்தைச் சுற்றி இருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது ரயில் நிலையத்தை நோக்கி ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீப்பாயயை இறக்கி வைத்துவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தன. தற்போது ஆட்டோவின் எண் வைத்து ரயில்வே காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

அதேசமயம் பீப்பாயில் இருந்த பெண்ணின் தகவல்கள் ஏதும் தெரியாததால். அவரது புகைப்படத்தை மற்ற மாநில காவல் நிலையங்களுக்கும் அனுப்பி ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்