தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Amruta: மாடல் - வங்கியாளர் - அரசியல்வாதியின் மனைவி என பன்முகத்திறமையில் ஜொலிக்கும் அம்ருதா ஃபட்னாவிஸ் பிறந்தநாள் இன்று

Amruta: மாடல் - வங்கியாளர் - அரசியல்வாதியின் மனைவி என பன்முகத்திறமையில் ஜொலிக்கும் அம்ருதா ஃபட்னாவிஸ் பிறந்தநாள் இன்று

Marimuthu M HT Tamil
Apr 09, 2024 11:22 AM IST

Amruta Fadnavis:மாடலும் வங்கியாளருமான அம்ருதா ஃபட்னாவிஸின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இன்று அவருக்கு வயது 45.

அம்ருதா பட்னாவிஸ்
அம்ருதா பட்னாவிஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த அம்ருதா ஃபட்னாவிஸ்?: அம்ருதா ஃபட்னாவிஸ் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் வசிக்கும் கண் மருத்துவரான ஷரத் ரானடேவுக்கும், மருத்துவருமான சாருலதா ரானடேவுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி மகளாகப் பிறந்தார். இளம்வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் கொண்ட அம்ருதா, பள்ளிப்படிப்பில் மாநில அளவில் விளையாடும் டென்னிஸ் வீராங்கனையாவார். அதன்பின், நாக்பூரில் ஜி.எஸ். வணிகவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின், நிதித்துறையில் எம்.பி.ஏ முதுகலைப் படிப்பினையும், புனேவில் உள்ள சிம்பயோஸிஸ் சட்டப்பள்ளியில் வரிவிதிப்பு சட்டங்களைப் படித்தார்.

அதன்பின், 2005ஆம் ஆண்டு தேவேந்திர ஃபட்னாவிஸை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ளார்.

பாடகி: அம்ருதா, ஆறுவயதில் இருந்தே பாடல் பாடுவதைப் பயின்று வருகிறார். பிரகாஷ் ஜாவின் ஜெய் கங்காஜலில் ‘சப் தன் மதி’ என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆனார். பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் வாழ்வை மையமாகக் கொண்டு, ‘சங்கர்ஷ் யாத்ரா’ என்னும் பாடலைப் பாடினார்.

மேலும் ’ஃபிர் ஷே’ என்னும் மியூஸிக் வீடியோவில் பாடிய அம்ருதாவினை ஊக்கப்படுத்தும் விதமாக, அதனை, அமிதாப் பச்சன் வெளியிட்டார். அதில் அவர் நடிக்கவும் செய்தார். மேலும் 2018ஆம் ஆண்டில் ‘மும்பை நதி கீதம்’ என்னும் ஆல்பத்தில் பாடினார், அம்ருதா. இது மும்பையில் ஓடும் நான்கு நதிகளை மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்தியது எனலாம். மேலும், 2020ஆம் ஆண்டில் ஆசிட் வீச்சுக்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையில் ஒரு பாடலையும், கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றியவர்களை உற்சாகப்படுத்தி ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

மேலும், 2022ஆம் ஆண்டு, மகா சிவராத்திரியின்போது, சிவ தாண்டவப் பாடலைப் பாடினார். மேலும் லவ் யூ லோகந்திரா என்னும் படத்தில் பாடல் பாடியுள்ளார்.

வங்கிப் பணி: ஆக்ஸிஸ் வங்கியில் ஒரு நிர்வாக காசாளராக பணியில் நுழைந்த அம்ருதா, 17 ஆண்டுகளாக அதே வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் ஆக்ஸிஸ் வங்கியின் துணைத் தலைவராகவுள்ளார். தனது கணவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், பின் துணைமுதலமைச்சராக ஆனபின்னும், அவர் அப்பதவியில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

சமூகப் பணிகள்: 2017ஆம் ஆண்டில், அம்ருதா ஃபட்னாவிஸ் ஆசிட் தாக்குதலில் தப்பியவர்களுக்கான ஃபேஷன் ஷோவை ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வில் பங்கு எடுத்த மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கருணைத்தொகையை ரூ. 2 லட்சம் அதிகரித்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.

மேலும் அம்ருதா, 2019ஆம் ஆண்டில், மும்பையின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின், இசைத்திறமையைக் கண்டறியும் ‘ மிட்டி கே சிதாரே’என்னும் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

அம்ருதா ஃபட்னாவிஸ் 2015ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் சீன அமைதியை சீராக்குவதற்காக ‘மானசரோவருக்கு’தூதுக் குழுவை வழிகாட்டினார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச அமைதிக்கான காலை உணவு பிரார்த்தனையில், 2017ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார், அம்ருதா.

தவிர, மாடலாகவும் இருந்து கலக்கி வருகிறார், அம்ருதா.  ஒரு பக்கம் அரசியல்வாதியின் மனைவி, மறுபக்கம் மாடல், இன்னொரு பக்கம் சமூகப்பணி என பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறார், அம்ருதா ஃபட்னாவிஸ்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்