Accident: பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் பலி
Bus accident in pakistan: பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
தென்மேற்கு பாகிஸ்தானில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
குவாட்டா நகரில் இருந்து கராச்சி நோக்கி இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது. இன்று காலை இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது.
பேருந்து கீழே விழுந்ததும் தீப்பற்றிக் கொண்டது. பேருந்தில் 48 பேர் பயணித்தனர்.
அவர்களில் 40 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தீயில் கருதி சிதைந்த உடலை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, நவம்பர் மாதம், தெற்கு பாகிஸ்தானில் உள்ள ஆழமான மற்றும் நீர் தேங்கிய பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்ததில் 11 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் சாலைகளில் 27,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
டாபிக்ஸ்