இன்ஸ்டாவில் வேறு ஒரு ஆணுடன் பேசிய காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்
ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல் வெளியில் வியாழனன்று காலை காணாமல் போன பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்டாகிராமில் வேறு ஒரு ஆணுடன் பேசிய காதலியை காதலன் அடித்தே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஜார்கண்ட் மாநிலத்தின் உர்ஜா நகரில் உள்ள பிரபல ஆங்கில பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த மாணவனும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவி இன்ஸ்டா கிராமில் வேறு ஒரு பையனுடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த மாணவன் ஆத்திரமடைந்துள்ளார்.
இதையடுத்து புதன்கிழமையன்று மாலை ஹோலி கொண்டாடுவதற்காக தனது தோழியின் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் காதலியை இருப்பு கம்பியால் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல் வெளியில் வியாழனன்று காலை காணாமல் போன பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலையில் ஈடுபட்ட மாணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்டாவில் வேறு ஒருவருடன் பேசியதால் மாணவியை கொலை செய்தாக மாணவன் ஒத்துக்கொண்டான். இதையடுத்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி மற்றும் சிறுமியின் கையடக்க தொலைப்பேசி ஆகியவை சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் நாது சிங் மீனா தெவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க துணைப் பிரிவு காவல் அதிகாரி (SDPO) சிவசங்கர் திவாரி தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து மாணவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
17 வயதே நிரம்பிய மாணவன் தன் உடன் பயின்ற மாணவியை கொலை செய்த சம்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்