தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thavamai Thavamirundhu: வீட்டை விட்டு காணாமல் போகும் சீதா..

Thavamai Thavamirundhu: வீட்டை விட்டு காணாமல் போகும் சீதா..

Aarthi V HT Tamil
Feb 22, 2023 01:18 PM IST

தவமாய் தவமிருந்து சீரியலின் இன்றைய அப்டேட் என்ன என பார்க்கலாம்.

தவமாய் தவமிருந்து
தவமாய் தவமிருந்து

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் கடந்த வாரம் மலர், ரேவதி, ராஜா உள்ளிட்டோர் முதலில் மார்க் மற்றும் சீதாவை பிரிக்க வேண்டும் என திட்டம் போட்டு அதற்கான வேலைகளில் இறங்கிய நிலையில் இந்த வாரம் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, ராஜா சீதாவிடம் அன்பு காட்டுவது போல் நடிக்க, சீதா இந்த வீட்டில் பாதி என் பங்கு, அதை எழுதி கொடுப்பதாக சொல்கிறாள். அடுத்து சீதா வீட்டை எழுதி கொடுக்க ராஜா அதை கிழித்து மன்னிப்பு கேட்கிறான்.

மார்க் அது போலி பத்திரம் என தெரிந்த பின் ராஜாவை அடிக்கிறார். ராஜா மேகலா இருவரும் வீட்டை விட்டுக் கிளம்ப சீதா மார்க்கிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறாள்.

அடுத்து உமா மயக்க நிலையில் hospital க்கு போக, தணிகா மார்கிடம் உமாவுக்கு அபார்ட் பண்ணுவதாக கூற, மார்க் டாக்டரிடம் விசாரிக்க, டாக்டர் உமா abort பண்ணி விட்டதாக சொல்ல, கோவமடைந்த மார்க் உமாவை அடிக்க, ரவி தடுத்து உண்மையை சொல்கிறான்.

இதனால் சீதா மார்க்கிடம் சண்டை போடுகிறாள். மறுநாள் சீதா கடிதம் எழுதி விட்டு காணாமல் போகிறாள்.

அடுத்து மார்க், பாண்டி என இருவரும் சீதாவை தேட சீதா எங்கு தேடியும் கிடைக்காததால் மார்க் தன் பிள்ளைகளிடம் சண்டை போடுகிறார். அப்போது மார்க்கிற்கு சீதாவிடம் இருந்து போன் வர சீதா இந்த வீட்டை பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்தால் தான் நான் இந்த வீட்டிற்கு வருவேன் என சொல்ல, மார்க் ஒப்புக்கொள்கிறார்.

மறுநாள் ரெஜிஸ்டர் வீட்டிற்கு வர, மார்க் கையெழுத்து போட மறுக்க சீதா கோட்டை தாண்டி போக மார்க் அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் தவமாய் தவமிருந்து சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே தவமாய் தவமிருந்து சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்