Meenakshi Ponnunga: பிரபல சீரியலில் இருந்து விலகிய அர்ச்சனா! - காரணம் என்ன?
பிரபல சீரியலில் இருந்து விலகிய பாலுமகேந்திரா நடிகை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான மீனாட்சி கதாபாத்திரத்தில் பிரபல நடிகையான அர்ச்சனா நடித்து வந்தார். இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக சின்னத்திரை பக்கம் தகவல்கள் உலா வந்தன. இதனிடையே அவரே அந்த தகவலை தற்போது அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார்
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அர்ச்சனா, “ நான் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். நீங்கள் மீனாட்சிக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்கு கொடுத்த வரவேற்பிற்கும் நன்றி.. இன்னொரு சீரியலில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன்” என்றார்.
தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை அர்ச்சனா. கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான தை பொங்கல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அதனைத்தொடர்ந்து காதல் ஓவியம், வசந்தமே வருக, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, வீடு, சந்தியா ராகம், வைதேகி வந்தாச்சு, சீதக்காதி, நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் ஆதர்ச நடிகையாக வலம் வந்த இவர் 2 தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
டாபிக்ஸ்