68th National film awards 2022:வேஷ்டி சட்டையில் சென்று விருது வாங்கிய சூர்யா
நடிகர் சூர்யா 68 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவிற்கு வேஷ்டி சட்டையில் சென்றுள்ளார்.
திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68 ஆவது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து டெல்லியில் இன்று (செப் 30) இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்து உள்ளது.
இதனை முன்னிட்டு அவர் வேஷ்டி சட்டையில் சென்று விருது வாங்கி உள்ளார். அவருடன் மனைவி ஜோதிகாவும் சென்று இருந்தார். கணவர் விருது வாங்குவதை கீழே அமர்ந்து கை தட்டி அவர் ரதித்து பார்த்தார்.
முதல் முறையாக நடிகர் சூர்யா தேசிய விருது வாங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டாபிக்ஸ்