Sita Raman: உண்மை தெரியாமல் சீதாவை பாராட்டிய மகாலட்சுமி.. ராம் செய்த விஷயம்
சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
-
ட்ரெண்டிங் செய்திகள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமின் தங்கைகளை சீதா காளி வேடத்தில் மிரட்டி ஓட விட்டதை தொடர்ந்து ராமிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும் என கேட்க அவன் புட்டு பிடிக்கும் என சொல்கிறான்.
உடனே சீதா சரி நான் நாளைக்கு செய்து கொடுக்கிறேன் என சொல்ல ராம் வேண்டாம் என சொல்லியும் மறுநாள் சீதா தன்னுடைய அம்மாவிடம் கேட்டு புட்டு சமைக்கிறாள்.
அடுத்து சீதாவை காளி வேடத்தில் பார்த்து பயந்த ராமின் தங்கைகளுக்கு காய்ச்சல் வந்து விட மகாலட்சுமி அவர்களை மருத்துவமனைக்கு கூட்டி சென்று வருகிறார்.
அடுத்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட உட்கார்ந்து சீதா சமைத்தது என தெரியாமல் புட்டை சாப்பிட்டு சூப்பரா இருக்கு என பாராட்டுகிறாள். மேலும் ராமிடம் எப்படி இருக்கு என கேட்க அவன் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறான்.
பிறகு ராம் எழுந்து சென்று வேலைக்காரியிடம் அக்கா புட்டு சூப்பர் என பாராட்ட இதைக்கேட்ட சீதா சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்