Sita Raman: வம்பிழுத்த அர்ச்சனா.. சீதா கொடுத்த பதிலடி
சீதா ராமன் சிரீயலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாலினி மகாலட்சுமிக்கு போன் செய்து மதுவுக்கும் சூர்யாவுக்கும் முதலிரவு நடக்காமல் போன விஷயத்தை சொல்ல மகாலட்சுமி சந்தோஷம் அடைகிறாள்.
அடுத்து மகாலட்சுமி வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சீதா சாப்பிட வந்து தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறாள். இதை பார்த்த அர்ச்சனா இந்த பயம் எப்பவும் இருக்கணும், நீ எங்க கூட எல்லாம் உட்கார்ந்து சாப்பிட கூடாது என சொல்லி கலாய்க்கிறாள்.
உடனே சீதா நீங்க எல்லாம் சேர்ல உட்கார்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு சிலிண்டர் மாதிரி குண்டாகிடுவீங்க என கலாய்த்து பதிலடி கொடுக்கிறாள்.
அடுத்து மறுநாள் காலையில் ராமின் தங்கைகள் ரொம்ப நேரம் தூங்கி கொண்டிருக்க சீதா அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி எழுப்புகிறாள். இதனால் அவர்கள் அப்பாவிடம் புகாரளிக்க சேதுபதி சீதாவை திட்டி தீர்க்கிறார்.
அதன் பிறகு சீதா பெண்கள் காலையில் எழுந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சொல்லி புரிய வைக்கிறாள். அடுத்து அன்று இரவு சீதா மீது இருக்கும் கோபத்தில் ராமின் தங்கைகள் பேய் வேடத்தில் சீதாவை பயமுறுத்த போக சீதா காளி வேஷத்தில் அவர்களை பயப்பட வைத்து ஓட விடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை பார்க்கலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்