Rajinikanth: சந்திரமுகி 2 ரிலீஸ்.. சரவணனிடம் ஆசிர்வாதம் வாங்கிய வேட்டையன்
நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
சந்திரமுகி 2 படம் இந்த வாரம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்லது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னதாக இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு திடீரென தள்ளி வைத்துள்ளது. இதன் வெளியீடு செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி நடிப்பதால் சந்திரமுகி 2 தள்ளிப்போனதாக கூறப்பட்டது.
படம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில், இறுதிப் பிரதியைத் தயாரிக்கும் போது 480 காட்சிகள் காணாமல் போனதால் படம் ரிலீஸாக தாமதம் ஏற்பட்டது என இயக்குநர் பி.வாசு விளக்கம் கொடுத்தார்.
படம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில், இறுதிப் பிரதியைத் தயாரிக்கும் போது 480 காட்சிகள் காணாமல் போயுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில், “வணக்கம் நண்பர்களே ரசிகர்களே, இன்று நான் எனது தலைவரையும் குருவுமான ரஜினிகாந்தை சந்தித்தேன்.
ஜெயிலரின் பிளாக் பஸ்டர் வெற்றிக்காக அவரை வாழ்த்துவதற்காகவும், செப்டம்பர் 28 ஆம் தேதி சந்திரமுகி 2 ரிலீஸாவதால் அதற்கான ஆசீர்வாதங்களைப் பெற்றேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். தலைவர் எப்போதும் பெரியவர். குருவே சரணம் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்