Bigg Boss 7: அனிதாவை தொடர்ந்து பிக் பாஸுக்கு செல்லும் செய்தி வாசிப்பாளர்
பிக் பாஸ் 7 ஆவது சீசனில் செய்தி வாசிப்பாளர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்,
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை கச்சிதமாக செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும என பிக் பாஸ் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியலை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு வருகின்றனர். ரேகா நாயர், ம கா பா ஆனந்த், விஜே பாவனா, பயில்வான் ரங்கநாதன் ஆகியோரின் பெயர்கள் இதுவரை கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனது தனித்துவமான குரலால் மிகவும் பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 5ல் ஏற்கனவே செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பங்கேற்றதைத் தொடர்ந்து, ரஞ்சித் தற்போது பி க்பாஸில் பங்கேற்பார் என வதந்தி பரவி வருகிறது. இந்த தகவலின் உண்மையை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9