Ravinder Chandrasekar: ‘ஏ’ கிளாஸ் சிறை வழங்க கோரி மனைவி மகாலட்சுமி மனு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மோசடி வழக்கில் சிறை சென்றுள்ள கணவர் ரவீந்தர் சந்திகசேகருக்கு ஏ கிளாஸ் கேட்டும், ஜாமின் கேட்டும் நடிகை மகாலட்சுமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வரும் ரவீந்தர் சந்திரசேகர், லிப்ரா புரொடக்ஷன் மூலம் படங்களை தயாரித்தும், விநியோகம் செய்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி ரூ. 18 கோடி மோசடி செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரை போல் மேலும் 2 பேரிடம் ரூ. 8 கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதுதொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரந் சந்திரசேகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது ரவீந்தர் சந்திரசேகரன் சிறையில் இருந்து வரும் நிலையில், அவரது மனைவியும் நடிகையுமான மகாலட்சுமி சிறையில் தனது கணவருக்கு ஏ கிளாஸ் வழங்குமாறு கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அத்துடன் இந்த வழக்கில் ரவீந்திரன் சந்திரசேகரனுக்கு ஜாமின் வழங்க கோரியும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9