தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Maari Serial Today Episode

Maari : மாரியின் கைக்கு கிடைத்த சிலை.. முடிவுக்கு வருமா தாராவின் ஆட்டம்?

Divya Sekar HT Tamil
Mar 13, 2023 11:33 AM IST

மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்ப்போம்.

மாரி
மாரி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாரி பூஜை முடித்து கருப்பசாமி கோவிலுக்கு செல்ல அங்கு பூசாரி நீ பூஜையை நல்லபடியாக செய்து முடித்த கருப்பன் கண்டிப்பா உன்னுடைய குலதெய்வத்தை காட்டுவான் என சொல்லி ஒரு தேங்காயை உருட்டி விட அந்த தேங்காய் காட்டும் திசையில் சென்று தோண்டி பாருங்கள் உங்களுடைய குலதெய்வம் கிடைக்கும் என சொல்லி அனுப்புகிறார்.

இதைக் கேட்ட சங்கரபாண்டி மாரிக்கு முன்பாகவே அந்த இடத்திற்குச் சென்று தோண்டி பார்க்க சிலை ஒன்று கிடைக்க அதை எடுத்துக் கொண்டு எலும்பு கூடை வைத்து மூடுகிறான். அதன் பிறகு மாரி அந்த இடத்திற்கு வந்து தோண்டி பார்க்க அவளுக்கும் சிலை கிடைக்கிறது. இதைப் பார்த்த சங்கர பாண்டி சிலை எப்படி கிடைக்கும் எலும்பு கூடு தானே இருக்கும் என அதிர்ச்சியாக பார்க்க எலும்புக்கூடு அவனை கட்டிக் கொள்கிறது. இதனால் சங்கர பாண்டி உட்பட தாராவின் டீம் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மறுபக்கம் சிலை கிடைத்த சந்தோஷத்தில் இருக்கும் மாரி அந்த சிலைக்கு பூஜை செய்து வழிபடத் தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன? தாராவின் வில்லத்தனம் குடும்பத்திற்கு தெரிய வருமா என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்