தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari: மாரியின் பூஜையை கெடுக்க தாரா போட்ட திட்டம்… மீண்டும் வந்த கருப்பசாமி!

Maari: மாரியின் பூஜையை கெடுக்க தாரா போட்ட திட்டம்… மீண்டும் வந்த கருப்பசாமி!

Aarthi V HT Tamil
Mar 01, 2023 01:16 PM IST

மாரி சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

மாரி
மாரி

ட்ரெண்டிங் செய்திகள்

கருப்பசாமி மாரியை தாமரைப் பூவை வைத்து பூஜை செய்ய சொன்ன நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மாரியிடம் கோவிலில் நடந்தது என்ன என குடும்பத்தார் கேட்க மாரி கருப்பசாமி சொன்ன பூஜை குறித்து சொல்கிறாள். குடும்பத்தில் உள்ள எல்லோரும் சுத்த பத்தமாக இருந்து இந்த பூஜையை செய்ய வேண்டும் என சொல்கிறாள்.

அதன் பிறகு மாரி தேவி போட்டோவின் முன்பு நின்று வேண்ட அங்கு தோன்றும் ராசாத்தி இந்த பூஜை முடியும் வரை நான் உனக்கு துணையாக இருப்பேன் என வாக்கு கொடுக்க மாரி உங்களுக்கு என்ன கைமாறு செய்வது என்று தெரியல என சொல்ல நீ என்னுடைய குழந்தையை உன்னுடைய குழந்தை போல பாத்துக்கிட்டா மட்டும் போதும் என சொல்லி ராசாத்தி மறைக்கிறாள்.

அதன் பிறகு கடுப்பாகி உள்ளே செல்லும் தாரா ரூமில் ஒரு கருப்பு உருவத்தை பார்த்து பயப்படுகிறாள் பிறகு அது நட்சத்திரா என தெரியவர என்னாச்சு என கேட்க அவள் கோவிலில் நடந்த விஷயங்களை தாராவிடம் சொல்கிறாள்.

அதன் பிறகு இந்த பூஜையை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என்ன செய்வது என யோசித்து மந்திரவாதிக்கு போன் போட அவர் இந்த பூஜை செய்யும் போது வீட்டில் எல்லோரும் சுத்தமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் பூஜை முழுமையடையும் இல்லை என்றால் அதற்கான பலன் கிடைக்காது என சொல்லி வீட்டில் கறி வாங்கி வந்து சாப்பிடுங்கள் என ஐடியா கொடுக்கிறார்.

தாராவும் சாமியார் கொடுத்த ஐடியாவை அப்படியே செய்து விடலாம் என சொல்லி சங்கரபாண்டியை கறி வாங்கி வந்து சாப்பிட சொல்கிறாள். பிறகு மாரி தாமரை மொட்டை பூஜை அறையில் வைத்து தனது பூஜையை தொடங்க சங்கர பாண்டி ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்து அது வந்ததும் வாங்கி உள்ளே எடுத்துச் சென்று ரூமில் வைத்து சாப்பிட முயற்சி செய்ய அவர் முன் தோன்றும் கருப்புசாமி பூஜையை கெடுக்க முயற்சி பண்றியா என சாட்டையால் அடி வெளுக்க அஞ்சி நடுங்கி வெளியே ஓடுகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்