தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2: கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நடிகர் ஜெகதீஷ் - சூட்டோடு சூடாக புஷ்பா 2வில் ஐக்கியம்

Pushpa 2: கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நடிகர் ஜெகதீஷ் - சூட்டோடு சூடாக புஷ்பா 2வில் ஐக்கியம்

Marimuthu M HT Tamil
Feb 03, 2024 04:25 PM IST

கடந்த ஆண்டு தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஜெகதீஷ் தற்போது ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் 'புஷ்பா 2' படப்பிடிப்பு தளத்தில் இணைந்துள்ளார்.

 நடிகர் ஜெகதீஷ், புஷ்பா 2வில் கேஷவா கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூனின் நண்பனாக மீண்டும் நடிக்கிறார்.
நடிகர் ஜெகதீஷ், புஷ்பா 2வில் கேஷவா கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூனின் நண்பனாக மீண்டும் நடிக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த நடிகர் ஜெகதீஷ்:

ஜெகதீஷ் மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டதாக படக்குழுவைச் சேர்ந்த ஒரு வட்டாரம் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, "அவருக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவர் நடிப்பில் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஜாமீனில் வெளியே வந்தது அவரை மீண்டும் மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே தான் உள்ளது. அவர் இல்லாததால் தயாரிப்புத்தரப்பு பல தாமதங்களை எதிர்கொண்டது. அவரது கதாபாத்திரமான கேசவா இந்த முழு கதையையும் விவரிக்கிறது. மேலும் அவரது பாத்திரம் முக்கியமானது. தற்போது அல்லு அர்ஜுனுடன் ஹைதராபாத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கி வருகிறார். அவரது ஜாமீன் மனு இதுவரை எதிர்க்கப்படவில்லை" என்றார்.

டிசம்பரில் நடிகர் ஜெகதீஷுக்கு நடந்தது என்ன?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டார். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சஞ்சலகுடா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி தெலுங்கு துணை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில், ஜெகதீஷ் மிரட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சில நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜெகதீஷ், தவறான நோக்கத்துடன் துணைநடிகையுடன் சேர்ந்து நெருக்கமாக இருப்பதைப் போன்ற படங்களைக் கிளிக் செய்து வைத்துள்ளார். மேலும் நடிகர் ஜெகதீஷ் அவள் வேறொரு ஆணுடன் பழகுவதைக் கண்டு பொறாமைப்பட்டு மிரட்டியுள்ளார் எனத்தெரிகிறது. இதனால் அந்த துணைநடிகை மரித்தார்.

அதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டார்.

நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்ட பிறகு, பாடகர் சின்மயி எழுதியதாவது, "இன்று மற்றொரு இளம் பெண் இறந்துவிட்டார். ஏனென்றால் ஒரு ஆண் அவளை மிரட்டுவது எளிது என்று நினைத்துள்ளார். ஏனென்றால் ஒரு பெண்ணின் மானம் அவளது உடலில் இருக்கிறது என்று நம் சமூகம் சொல்கிறது. இந்திய சட்ட அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வழக்கு பல ஆண்டுகள் எடுக்கும். குர்மீத் ராம் ரஹீம் போல குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் இந்த நபர் ஜாமீனில் இருப்பார். அவ்வளவுதான்" என்றார்.

அதேபோலே, நடிகர் ஜெகதீஷ், புஷ்பா 2 படத்தில் மீண்டும் ஜாமீன் பெற்றுவந்து இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்கொலை உதவி எண்கள்: உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால் அல்லது யாரையாவது தெரிந்தால், தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள மனநல நிபுணரை அணுகவும். ஹெல்ப்லைன் எண்கள்: ஆஸ்ரா: 022 2754 6669; சினேகா இந்தியா அறக்கட்டளை: +914424640050 மற்றும் சஞ்சீவினி: 011-24311918

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்