Surya jyothika: சாதிபற்றில் நின்ற சிவக்குமார்; விடாப்பிடியாக நின்று ஜோவை கரம் பிடித்த சூர்யா.. கை நழுவி போன கார்த்தி?
சூர்யா ஜோதிகா காதல் கதை குறித்தான தகவல்களை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு பகிர்ந்து இருக்கிறார்.
அவர் பேசும் போது “ சூர்யா பல படங்களில் ஜோதிகாவை கதாநாயகியாக போடுவதற்கு பரிந்துரை செய்திருக்கிறார். அப்போதே சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே ஒரு சின்ன காதல் இருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
கடுப்பான பாலா
இப்படித்தான் பாலாவின் நந்தா படத்தில் லைலா விற்கு பதிலாக ஜோதிகாவை கமிட் செய்யலாம் என்று பாலாவிடம் சொல்ல கடுப்பான பாலா, என்னப்பா காதல் கீதல் ஏதும் செய்கிறாயா? என்று கேட்க, அங்கிருந்து அப்படியே நகர்ந்து விட்டார் சூர்யா.
நந்தா படத்திற்கு பிறகு தான் சூர்யாவிற்கு காக்க காக்க பட வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் ஜோதிகாவையே சூர்யா பரிந்துரை செய்ய, இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் வெளியே தெரிய வருகிறது. இந்த நிலையில் முன்னணி பத்திரிக்கை நிருபர் ஒருவர் இவர்களது காதல் குறித்தும், அதில் சில கேள்விகளை முன்வைத்தும் கட்டுரை ஒன்றை எழுதி விடுகிறார்
கொதித்த சிவக்குமார்
இதை பார்த்து கொந்தளித்து போன சிவக்குமார் அந்த நிருபரை தன் வீட்டிற்கே அழைத்து கன்னா பின்னாவென்று திட்டி அனுப்பினார். அதன் பின்னர் விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட சூர்யா நான் ஜோதிகாவை தான் கல்யாணம் செய்வேன் என்று விடாப்பிடியாக நின்றார்.
பின்னர் எல்லோரும் அரை மனதாக தான் ஜோதிகாவை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின்னர் ஒரு மேடையில் கூட சிவக்குமார் பெரியவர்தான் அவர் இஷ்டத்திற்கு திருமணம் செய்து கொண்டார் சிறியவனுக்காவது நம்ம ஜாதியில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வார்த்தையை விட்டார்.
காரணம் இருக்கிறது அந்த சமயத்தில் கார்த்திக்கும் நான்கெழுத்து நடிகை ஒருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட சொன்னார்கள். அதை பார்த்து அதிர்ந்து போன சிவகுமார் தரப்பு உடனே தன்னுடைய சொந்தத்திலேயே ஒரு பெண்ணை பார்த்து கார்த்திக்கு திருமணம் செய்து வைத்தார்கள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்