RIP Manobala: ‘சாவுற வயசா இது..’ மனோபாலா இறப்பிலும் சர்சையை கிளப்பிய பயில்வான்!
மனோபாலா குடியால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனதாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்து தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கியவர் மனோபாலா. ஆகாய கங்கை, பிள்ளை நிலா உள்ளிட்ட பல படங்களை டைரக்ட் செய்துள்ள இவர் ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்கவேட்டை உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வந்த இவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவரது இறப்பு திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் அவரது உடலுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்றும் பல பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் மனோபாலா குடியால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ மனோபாலா 69 வயதில் இறந்து போக காரணம் என்ன? அவர் 85 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய உடலை அவரே கெடுத்துக்கொண்டார்.
எனக்குத் தெரிந்து அவர் 30 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாக இருந்தார். மதுவிற்கு எதிராக நாம் எவ்வளவு பிரச்சாரங்கள் நடத்தினாலும் அது மக்களிடம் சென்று சேர்வது இல்லை. காரணம், இப்போது சாவுக்கும் மது, கல்யாணத்திற்கும் மது என எல்லாவற்றிற்குமே மதுவாக இருக்கிறது. ஆகையால் சினிமாவில் இருந்து மக்களுக்கு கிடைத்திருக்கும் பாடம் மதுவை தொடாதீர் என்பதே. விதி வந்து இறப்பது வேறு விஷயம். ஆனால் மது அருந்தி இறப்பது கேவலமான விஷயம்” என்று பேசினார்.
டாபிக்ஸ்