தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ar Rahman Has Mentioned On His Twitter Page That There Is A Problem In Getting Permission To Conduct Music Concerts In Chennai Fans Shocked

AR Rahman:சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை?காரணம் சொல்லி வருந்திய ARR!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 09, 2023 02:26 PM IST

சென்னையில் இசைக்கச்சேரிகளை நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் (ar rahman instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் லிஸ்டில் ஒரு பக்கம் பல படங்கள் இருந்தாலும், வெளிநாடுகளிலும் உள்ளூர்களிலும் இசைக்கச்சேரிகளை நடத்துவது அவரது வழக்கமாக இருக்கிறது. இந்த இசைக்கச்சேரிகளில் ஏராளமான அவரது ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்து விடும். 

இந்த நிலையில் இவர் அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது வருகிற மார்ச் 7 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது தொடர்பான போஸ்டை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் ‘இங்கு சென்னை என்ற நகரம் ஒன்று இருக்கிறது.. உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏ. ஆர்.ரஹமான் ‘அனுமதி, அனுமதி, அனுமதி... அனுமதி கிடைக்கவே மாத கால ஆகி விடுகிறது ” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்