Nora Fatehi : தொட்டார் அறைந்தேன் -“ என் முடியைப் பிடித்து இழுத்து அறைந்தார் ”
Actress Nora Fatehi Speech: என்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகரை நான் அறைந்து விட்டேன் எனப் பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி தெரியாதவர்களே இருக்க முடியாது. கனடாவில் பிறந்து வளர்ந்த இவர் இந்திய சினிமாவில் கவனம் பெற்ற நடிகையாக வளம் வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
2014 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ரோர் - டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாகுபலி திரைப்படத்தில் மனோகரி என்ற பாடலில் இவர் ஆடி இருந்தார்.
தமிழில் கார்த்தி நடித்த தோழா திரைப்படத்தில் டோர் நம்பர் பாடலுக்குக் குத்தாட்டம் போட்டவர் இவர்தான். அனைத்து மொழிகளிலும் குத்துப் பாடல்களுக்கு இவர் தேவை என்று சொல்லும் அளவிற்கு அருமையாக நடனம் ஆடக்கூடியவர்.
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசன் கலந்துகொண்டு வெகுஜன மக்களிடத்தில் மேலும் பிரபலமானார். சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகரை நான் அறைந்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.
நோரா பேசியது பல மாதங்கள் கடந்து தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அப்போது அவர்," என்னுடைய முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது என்னுடன் பணியாற்றிய சக நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார்.
எனக்குக் கோபம் வந்த காரணத்தினால் அவரை அறைந்து விட்டேன். உடனே அவரும் என்னைப் பதிலுக்கு அறைந்தார். மீண்டும் நான் அவரை அறைந்தேன். அவர் மேலும் என்னை அறைந்து என் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். நானும் அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்தேன். அது என் வாழ்வில் மிகவும் மோசமான சண்டையாகும்" எனச் சிரித்துக் கொண்டே கூறினார்.
இவ்வளவு பெரிய சம்பவத்தை நோரா ஃபதேஹி சிரித்துக்கொண்டே சாதாரணமாக மேடையில் கூறிவிட்டார். ஆனால் இதுபோன்று பொது மேடையில் யாரும் தைரியமாகக் கூற மாட்டார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்