Ra. Sankaran: மௌன ராகம் பட நடிகர் ரா. சங்கரன் காலமானார்
மௌன ராகம் பட நடிகர் ரா. சங்கரன் இன்று உயிரிழந்தார்.
1974 ஆம் ஆண்டு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் ரா. சங்கரன். இதனையடுத்து அவர், தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, பெருமைக்குரியவள், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை, குமரி பெண்ணின் உள்ளத்திலே உள்ளிட்ட 7 படங்களை இயக்கினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர் இயக்கம் மட்டும் இல்லாமல் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். நடிகராக ஆடிப்பெருக்கு படத்தின் தான் அறிமுகமானார்.
மேலும் புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, மௌன ராகம், உனக்காக வாழ்கிறேன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காதல் கோட்டை என பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து இருந்தார்.
மேலும் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பா கேரக்டரில் நடித்து இருந்தார். சந்திரமௌலி என அவரை அப்படத்தின் நடிகர் கார்த்திக் அழைக்கும் காட்சி திரைப்பட ரசிகர்களிடையே ஹிட்டானது.
இதனிடையே ரா. சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “ எனது ஆசிரியர்
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன் “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்