Anbumani Ramadoss: ’ஒரிஜினல் மாப்பிள்ளை தங்கர் பச்சான்தான்’ கடலூரில் சொந்த மச்சானை கலாய்த்த அன்புமணி!
”உண்மையான மாப்பிள்ளை யாரு? நம்ம தங்கர் பச்சான்தான் தொகுதியின் உண்மையான மாப்பிள்ளை. விஷ்ணு பிரசாத் திருமண மண்டபம் மாறி வந்து விட்டார்”

தேசிய ஜனநாயக கூட்டணியில் கடலூர் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாநகரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது அவர் பேசுகையில், நேற்று கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் பேசுகிறார். மாப்பிள்ளை அவராம், அவர் போட்டிருக்கும் சட்டை அமைச்சரர் உடையதாம். அமைச்சர் பிள்ளையை முதலில் மாப்பிள்ளையாக ஆக்க பார்த்தார். ஆனால் உண்மையான மாப்பிள்ளை யாரு? நம்ம தங்கர் பச்சான்தான் தொகுதியின் உண்மையான மாப்பிள்ளை. விஷ்ணு பிரசாத் திருமண மண்டபம் மாறி வந்து விட்டார்.
யாராக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் நாகரீகமாக பேச வேண்டும். என் தம்பிகளை நாங்கள் நல் வழியில் வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். என் தம்பிகள் பாசக்காரர்கள், அதே சமயம் கொஞ்சம் கோவக்காரர்கள். வஜ்ரா வாகனத்தையே பின்னோக்கி செல்ல வைத்தவர்கள்.
மீண்டும் சொல்கிறேன் தங்கர் பச்சான் அவர்களை தேர்வு செய்யுங்கள். அவரது மனதில் ஆழமான சமூக நீதி என்ற கருத்து இருக்கிறது. வேறு எந்த வேட்பாளர்களுக்கும் இந்த கருத்து இல்லை. சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாது.