Tirupati Temple: திருப்பதி தரிசனம்: ரூ.10,500 ஆன்லைன் டிக்கெட் நாளை ரிலீஸ்!
நாள் ஒன்று இருக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கும் நிலையில் 750 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
தலா 10,500 ரூபாய் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபடுவதற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட் நாளை காலை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள்,அவர்களுடைய பரிந்துரை கடிதங்களை கொண்டு வருபவர்கள் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.
இது தவிர தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கும் 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உரிய விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன.
நாள் ஒன்று இருக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கும் நிலையில் 750 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
250 டிக்கெட்டுகள் திருப்பதி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் விமான மூலம் வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும்
டிக்கட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupatibalaji.gov.in முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வழக்கமாக ரூ.300க்கு விற்கப்படும் டிக்கெட்டை தான் பெரும்பாலானோர் வாங்கி செல்வர். அந்த டிக்கெட் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன்படும் . ஆனால், அதை ஆன்லைனில் பெறுவது எளிதல்ல. புக்கிங் தொடங்கியதுமே சில நொடிகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிடும். நாளை ஓப்பனாகும் 10 ஆயிரத்து 500 ரூபாய் டிக்கெட் என்பது, முழுக்க முழுக்க பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கிச் செல்லும் ‘காஸ்ட்லி’ தரிசனம் டிக்கெட் ஆகும்.
டாபிக்ஸ்